search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் இந்தியா தொடர்"

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 145 ரன்கள் எடுத்து தோற்றது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. திலக் வர்மா அதிரடியாக ஆடி 39 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 21 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், முதல் டி20 போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

    • அறிமுக வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
    • இந்த ஆட்டம், இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியது.

    இரு அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று தரோபாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாவெல் 48 ரன்னும், பூரன் 41 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அறிமுக வீரரான திலக் வர்மா 39 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    இலக்கை நோக்கி விளையாடியதில் நாங்கள் சரியான திசையில் இருந்தோம். சில தவறுகளை செய்து விட்டோம். ஆனால் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் இது இளம் வீரர்களை கொண்ட அணி. அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

    இந்த ஆட்டம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தால் சேசிங் செய்வது மிகவும் கடினமாகிவிடும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் தோல்வி ஏற்பட்டது. ஆடுகளம் சூழலுக்கு ஏற்ப மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தோம். மேலும் சாகலும், குல்தீப் யாதவும் இணைந்து விளையாட வேண்டும் என்று விரும்பினோம். அக்சர்பட்டேலை பேட்டிங்கிலும் கொண்டு வந்து இருந்தோம்.

    முகேஷ் குமாருக்கு இந்த இரண்டு வாரங்கள், அவரது வாழ்க்கையில் சிறப்பானது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அறிமுக வீரர் திலக் வர்மாவின் பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆட்டம், இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மறுநாள் கயானாவில் நடக்கிறது.

    • இந்த போட்டியில் திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
    • இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் அறிமுகமாயினர்.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் அறிமுக டி20-யில் அரிதான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

    வெளிநாட்டில் அறிமுக போட்டியில் 3 சிக்சர் அடித்த வீரர்களில் ராகுல் டிராவிட் மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் திலக் வர்மா இணைந்துள்ளார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்னில் வெளியேறினார்.

    அறிமுக போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும், சஞ்சு சாம்சன் 12 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய், ஹோல்டர், ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
    • இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
    • இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன.

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதில் முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பாவெல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.

    இந்திய அணியில் திலக் வர்மா, முகேஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடுகின்றனர்.

    இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மயர், ரோமன் பாவெல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், அகேல் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், ஓபெட் மெக்காய்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனைகளை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் 2019-ம் ஆண்டு அந்த அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

    மேலும் அந்த அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 13 ஒருநாள் தொடர்களை இந்திய அணி கைப்பற்றி மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டு பிரைன் லாரா தலைமையில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடதக்கது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது. டெஸ்ட்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

    தொடரை கைப்பற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் அவர் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்து வரலாறு படைத்துள்ளார். அவர் முதல் 5 போட்டிகளில் 348 ரன்கள் குவித்து அந்த சாதனை பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.

    1989-ல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான சச்சின், தனது முதல் ஐந்து போட்டிகளில் 321 ரன்களைக் குவித்தார். அதைத் தொடர்ந்து சுப்மன் கில் 320 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது.
    • பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.

    தரோபா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.

    அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.

    • முதலில் ஆடிய இந்தியா 351 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்களில் ஆல் அவுட்டானது.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது.

    இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் ஆல் அவுட்டானது.

    இதனால் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:

    இது ஒரு சிறப்பான வெற்றி. உண்மையைச் சொல்வதானால், ஒரு கேப்டனாக இதுபோன்ற விளையாட்டுகளை நான் எதிர்நோக்குகிறேன்.

    இது சர்வதேச விளையாட்டை விட அதிகமாக இருந்தது. ஆபத்தில் இருப்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தோற்றால் நிறைய ஏமாற்றம் இருக்கும். வீரர்கள் சிறந்த குணத்தை வெளிப்படுத்தினர். அவர்களும் அதை ரசித்தார்கள், அழுத்தமான சூழ்நிலைகளில் அதை அனுபவிப்பதும் முக்கியம்.

    விராட் மற்றும் ரோகித் அணியின் ஒருங்கிணைந்த பகுதிகள். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

    ஆட்டத்திற்கு முன் விராட்டுடன் நன்றாக அரட்டையடித்தேன். 50 ஓவர் வடிவத்துடன் பழக வேண்டும் என்று அவர் விரும்பினார். அந்த அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு உண்மையிலேயே நன்றி.

    350 ரன்கள் எடுப்பது எப்போதும் முக்கியமானது. பேட்டர்கள் பந்தை துரத்துகிறார்கள், அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால் பேட்டர்கள் அதை உறுதி செய்வார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மிகவும் தாமதமாக எழுந்தது, அந்த பார்ட்னர்ஷிப் அதை 36-வது ஓவருக்கு கொண்டு சென்றது. பவர் பிளேயிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை வெஸ்ட் இண்டீசுக்கு வரும்போது விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இந்தியா 351 ரன்களை குவித்தது.
    • இந்திய அணியில் 4 வீரர்கள் அரை சதமடித்து அசத்தினர்.

    டிரினிடாட்:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 85 ரன்னிலும், இஷான் கிஷன் 73 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 51 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி வரை நின்ற ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    கடைசி கட்டத்தில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி ஆகியோர் போராடினர். 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 55 ரன்கள் சேர்த்தது.

    அல்ஜாரி ஜோசப் 26 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களைக் கடந்தது.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் குடகேஷ் மோட்டி 39 ரன்னும், ஆலிக் அதான்சே 32 ரன் எடுத்தனர்.

    இதன்மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது.

    டிரினிடாட்:

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

    அணியின் எண்ணிக்கை 143 ஆக இருந்தபோது இஷான் கிஷன் 73 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார். 41 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.

    தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின் அசத்தலாக ஆடியது.

    5வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்களை குவித்தது. பாண்ட்யா சிறப்பாக ஆடி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    ×